ஒப்பந்தத்தின் அடிப்படையில் மீண்டும் நாடு கடத்தப்படும் அகதிகள்
இலங்கையர் ஒருவர் உட்பட 65 அகதிகளை கிரீஸில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் துருக்கிக்கு இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இவர்களை நாடுகடத்தப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு முகாம்களில் தங்கியிருந்த 1000 இற்கும் மேற்பட்ட அகதிகளை இது வரையில் நாடுகடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அகதிகளில் முதியவர்கள்,பெண்கள் சிறுவர்கள் ஆகியோர் உள்ளடங்குவதாகத் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் துருக்கிக்கு இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில்,குறித்த அகதிகளை பாதுகாப்பான முறையில் நாடு கடத்துவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக கிரீஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஒப்பந்தத்தின் அடிப்படையில் மீண்டும் நாடு கடத்தப்படும் அகதிகள்
Reviewed by NEWMANNAR
on
October 08, 2016
Rating:

No comments:
Post a Comment