இலங்கை அகதிக்கு 9000 ஆயிரம் டொலரை செலுத்திய அவுஸ்திரேலிய நிறுவனம்....
இலங்கையின் அகதி அந்தஸ்து கோரிய ஒருவருக்கு அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்று 9000 ஆயிரம்டொலர்களை செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
குறித்த இலங்கையருக்கு ஒரு வாரத்துக்கு 38 முதல் 40 மணித்தியாலங்களுக்காக நிறுவனம்கொடுப்பனவை செலுத்தியுள்ளது.
எனினும் அவரிடம் 50 மணித்தியாலங்கள் பணிகளை செய்ய வைத்துள்ளது.
எனவே மேலதிக வேலைநேரக் கொடுப்பனவுகள் மற்றும் ,விடுமுறை தினங்களுக்கும் குறித்த நிறுவனம்கொடுப்பனவை வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
2015ம் ஆண்டு ஒக்டோபர் முதல் 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை கனரக வாகனம்ஒன்றின் சாரதியாக குறித்த இலங்கையர் பணி புரிந்தார்.
எனினும் அவருக்கு உரிய கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என்று ஒம்புட்ஸ்சுமனிடம் செய்தமுறைப்பாட்டை அடுத்தே கொடுப்பனவுகளை நிறுவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
இலங்கை அகதிக்கு 9000 ஆயிரம் டொலரை செலுத்திய அவுஸ்திரேலிய நிறுவனம்....
Reviewed by Author
on
November 11, 2016
Rating:

No comments:
Post a Comment