அண்மைய செய்திகள்

recent
-

சிவாஜிகணேசன் மணிமண்டபம் அக்டோபர் 1-ந் தேதி திறப்பு: தமிழக அரசு முடிவு


அக்டோபர் 1ம் தேதி சிவாஜிகணேசனின் 90-வது பிறந்த நாளன்று அவரது மணிமண்டபத்தை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


நடிகர் சிவாஜிகணேசன் மணிமண்டபத்தை அடையாறு சத்யா ஸ்டூடியோ அருகே தமிழக அரசு அமைத்துள்ளது. சுமார் 2 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பல கோடி ரூபாய் செலவில் இந்த மணி மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட அவரது சிலை, இந்த மணி மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அக்டோபர் 1-ந் தேதியன்று சிவாஜிகணேசனின் 90-வது பிறந்த நாள் நிகழ்கிறது. அந்த தினத்தில் சிவாஜிகணேசன் மணிமண்டபத்தை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதை திறந்து வைப்பார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

சிவாஜிகணேசன் மணிமண்டபம் அக்டோபர் 1-ந் தேதி திறப்பு: தமிழக அரசு முடிவு Reviewed by Author on September 27, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.