உலகின் முதன்முறையாக 3D பிரிண்ட் பாலம் -
உலகில் முதன்முறையாக நெதர்லாந்தில் 3D பிரின்டட் பாலம் உருவாக்கப்பட்ட நிலையில் மக்களுக்காக திறந்துவிடப்படவுள்ளது. 3D தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சமீபகாலமாக பொருட்கள் உருவாக்கப்படும் நிலையில் நெதர்லாந்தில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்தின் ஜமார்ட் என்ற இடத்தில் சுமார் 8 மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
95 சதவிகிதம் 3D பிரிண்டர் மூலமும், 5 சதவிகிதம் கான்கிரீட் மூலம் வடிவமைக்கப்பட்ட இந்த பாலம், 40 டிரக்குகளை தாங்க கூடிய அளவு வலிமையானதாம்.<
இப்பாலத்தை சைக்கிளில் செல்பவர்கள் மற்றும் நடந்து செல்பவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். இதுகுறித்து பாலத்தை வடிவமைத்த பொறியாளர்கள் கூறுகையில், சாதாரண பாலத்தை வடிவமைக்கும் செலவை விட இதன் செலவு குறைவு தான், முழுமையாக பாலத்தை உருவாக்கவே மூன்று மாதங்கள் தான் ஆனது என தெரிவித்துள்ளனர்.
உலகின் முதன்முறையாக 3D பிரிண்ட் பாலம் -
Reviewed by Author
on
October 20, 2017
Rating:

No comments:
Post a Comment