தேசிய மட்ட எறிபந்தாட்ட போட்டியின் நடுவராக தமிழர்
பாடசாலைகளுக்கு இடையில் தேசிய மட்டத்தில் நடத்தப்படும் எறிபந்தாட்ட போட்டியில் தமிழர் ஒருவர் நடுவராக கடமையாற்றுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரியில் உடற்கல்வி ஆசிரியராக கடமையாற்றும் க.கனகராஜாவே இவ்வாறு நடுவராக கடமையாற்றுகின்றார்.அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட விளையாட்டு விழா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று ஆரம்பமானது.
அந்த வகையில் குறித்த எறிபந்தாட்ட போட்டிகள் இன்றிலிருந்து தொடர்ந்து நான்கு நாட்களுக்கு மொரட்டுவையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளுக்கு இடையில் நடத்தப்பட்ட எறிபந்தாட்ட போட்டியில் இதுவரை வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த எவரும் நடுவராக கடமையாற்றவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
தேசிய மட்ட எறிபந்தாட்ட போட்டியின் நடுவராக தமிழர்
Reviewed by Author
on
October 03, 2017
Rating:

No comments:
Post a Comment