அண்மைய செய்திகள்

recent
-

வாக்குறுதியை காப்பாற்றிய மன்னார் பிரதேச செயலாளர் M.பரமதாஸன் நன்றி தெரிவிக்கும் சாந்திபுரமக்கள்


-மன்னார் சாந்திபுரம் கிராம மக்கள் வறட்சி நிவாரணம் வழங்கக்கோரி மன்னார் பிரதேசச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம். 15-11-2017 வறட்சி நிவாரணம்

 தற்போது நாட்டின் பல பாகங்களிலும் பாதீக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் வறட்சி நிவாரணம் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பல்வேறு கிராமங்களிலும் நிவாரணங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற போதும், சாந்திபுரம் கிராமத்தில் சுமார் 452 குடும்பங்கள் வசித்து வருகின்ற நிலையில் குறித்த கிராமத்தில் 60 குடும்பங்களுக்கு மட்டுமே நிவாரணங்கள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது.

 சாந்திபுரம் கிராமத்தில் உள்ள கிராம மட்ட தலைவர்களுக்கும், மன்னார் பிரதேசச் செயலாளர் M.பரமதாஸ் இற்கும் இடையில்; மன்னார் பிரதேசச் செயலகத்தில் சந்திப்பு இடம் பெற்றது. இதனைத் தொடர்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக மன்னார் பிரதேசச் செயலாளர் வழங்கிய உறுதி மொழியையடுத்து மக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டுச் சென்றனர்.

வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றினார் மன்னார் பிரதேச செயலாளர்  M.பரமதாஸன் இன்று காலை 10- 30 மணியளவில்   முதல் விடுபட்ட அனைத்துகுடும்பங்களுக்கும் வழங்கும் விதமாக வறட்சி நிவாரணம்வழங்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றது.

பெயர்ப்பட்டியலில் இடம்பெற்றுள்ள 442 குடும்பங்களுக்கான
நிவாரணத்தின் விபரம்
03அங்கத்தவர்களுக்கு- 2000 ரூபாவும்
03அங்கத்தவர்களுக்கு மேல் 2500ரூபாவும் பெறுமதியான உலர் உணவுப்பொதிகள்  வழங்கப்படுகின்றன
(அரச அதிகாரிகள் ஊழியர்கள் கொண்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை) 


சொன்னவாக்குறுதியை காப்பாற்றிய  மன்னார் பிரதேச செயலாளர்  M.பரமதாஸன் அவர்களுகு   RDA தலைவர் நிர்வாகத்தினர் மற்றும் சாந்திபுரம் மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்,
 











வாக்குறுதியை காப்பாற்றிய மன்னார் பிரதேச செயலாளர் M.பரமதாஸன் நன்றி தெரிவிக்கும் சாந்திபுரமக்கள் Reviewed by Author on November 24, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.