தமிழர்கள் சிந்திக்க வேண்டிய தருணமிது....... வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்
தமிழ் மக்களில் பெரும்பாலோர் எதிர்பார்த்தமை போன்று கூட்டமைப்புக்கு எதிரான கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பிலிருந்து விலகிச் சென்ற சுரேஸ் பிரேமச்சந்திரனும், கஜேந்திரகுமாரும் இணைந்து இந்த முன்னணியை உருவாக்கியுள்ளனர்.
தமிழ் மக்கள் பேரவையும் இந்த முன்னணிக்கு ஆதரவு தெரிவிக்குமென நம்பப்படுகிறது. தமிழ் மக்கள் பேரவை அமைக்கப்பட்டபோது அது கூட்டமைப்புக்கு எதிரான அமைப்பொன்றாகவே கருதப்பட்டது. ஆனால் கூட்டமைப் பைச் சேர்ந்த வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பேரவையுடன் இணைந்து கொண்டார்.
பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவராகவும் தெரிவு செய்யப்பட்டார். இவரைவிட தமிழரசுக் கட்சி தவிர்ந்த கூட்டமைப்பின் ஏனைய பங்காளிகளும் பேரவைக்குள் சங்கமமாகினர். அப்போது கூட்டமைப்பின் தலைமை இதைக் கண்டு கொள்ளவேயி்ல்லை. அரசியலுக்குள் நுழைகின்ற எண்ணம் பேரவைக்கு இல்லையென அதன் முக்கியஸ்தர்கள் அப்போது தெரிவித்தனர்.
அரசியல்வாதிகளின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை அரசியலில் ஈடுபடாதெனத் தெரிவித்த கருத்தைப் பலர் அப்போது நம்பவில்லை.தற்போது பேரவையின் கபட நோக்கம் அம்பலமாகியுள்ளது.
பேரவை அரசியல் செயற்பாடுகளில் கலந்துகொள்ளாதென வழங்கப்பட்ட உறுதிமொழி
தமிழர்களின் பிரச்சினைக ளுக்குத் தீர்வு காண்பதற்காகவே அரசியல் கலக்காத வகையில் பேரவை உருவாக்கப்பட்டதாகத் தெரிவித்தார்கள். இன்று அரசியல் கூட்டணிக்கு அந்தப் பேரவை ஆதரவு தெரிவிக்கின்றமை தமிழ்மக்களை ஏமாற்றுகின்றதொரு செயலாகக் கொள்ளத்தக்கதாகும். இத்தகையவர்கள் மக்களுக்கு விசுவாசமாக நடந்து கொள்வார்கள் என்பதை எந்த வகையிலும் நம்ப இயலாதுள்ளது. இதேவேளை தமிழ்மக்கள் பேரவையின் அரசியல் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் புளொட் அமைப்பு நடந்து கொண்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பாக பேரவையால் கூட்டப்பட்ட கூட்டத்தில் அந்தக் கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் எவரும் கலந்து கொள்ளாதது இதை உறுதி செய்துள்ளது. புளொட், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத் தக்கது.
இதேவேளை, வடக்கு மாகாண முதலமைச்சர் கூட்ட மைப்பிலிருந்து பிரிந்து சென்று கூட்டணி அமைத்த சுரேஷ் பிரேமச்சந்தி ரனை மறைமுகமாகச் சாடியுள்ளார். கட்சியின் நலன் கருதியே சுரேஷ் தனித்துப்போட்டியிடுவதாக அவர் கூறியிருப்பது கவனத்துக்குரியது. இதைவிட புதிய கூட்டணிக்கும் தமிழ் மக்கள் பேரவைக்கும் எந்தத் தொடர்பும் இல்லையெனக் கூறிய அவர், பேரவை கூட்டணியுடன்இணையாது எனவும் கூறியுள்ளார்.
முதலமைச்சர் தமது கருத்துக்களைச் சொல்லில் மட்டுமல்லாது செயலிலும் மக்களிடம் நிரூபித்துக் காட்டவேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது. அவர் தமது விசுவாசத் தன்மையை நிரூபிக்க வேண்டுமானால் உள்ளூராட்சித் தேர்தலின்போது கூட்டமைப்புக்கு ஆதரவான பரப்புரைகளி்ல ஈடுபட வேண்டும்.புதிய கூட்டணிக்கு எதிரான கருத்துகளைப் பகிரங்கமாகத் தெரிவிக்க வேண்டும்.
கூட்டமைப்பின் வெற்றிக்காக உழைப்பதே இவரது பிரதான கடமையாகவும் அமைந்திருத்தல் வேண்டும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது அவர் விட்ட தவறுகளுக்கு இதுவொரு பிராயச்சித்தமாகவும் அமையக் கூடும்.பேரவை குறித்த எதிர்பார்ப்பு காலப்போக்கில் பிசுபிசுத்துப் போனது
தமிழ் மக்கள் பேரவை தொடர்பாக ஆரம்பத்தில் பெரியதொரு எதிர்பார்ப்பு ஏற்படுத்தப்பட்டது. தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதே அதன் முக்கியமான நோக்கமெனவும் கூறப்பட்டது.தீர்வுத் திட்ட மொன் றையும் பேரவை தயாரித்திருந்தது. ஆனால் செயல்வடிவைப் பொறுத்தவரையில் எதையுமே அதனால் சாதிக்க முடியவில்லை என்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். தற்போது பேரவையிலும் பிளவுகள் தோன்றுவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன.
இதேவேளை தமிழ்த் தலைமை களது மோசமான அரசியல் நிலைப்பாட்டுக்கு முற்றுப் புள்ளி வைக்கவே புதிய கூட்டணி உருவாக்கப்பட்டதாக தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவரான கஜேந்திரகுமார் தெரிவித்திருக்கிறார். உள்ளூராட்சித் தேர்தல் இடம்பெறப்போகும் நிலையில்தான் தமிழ்த் தலைமைகளது அரசியல் நிலைப்பாடு மோசமான ஒன்றாக அவரது கண்களுக்குத் தெரி கின் றதா? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மேலும் இந்தக் கூட்டணிக்குக் கிடைக்கப்போகும் ஆதரவைப் பொறுத்தே அதன் மீதான நம்பகத் தன்மையை உறுதி செய்து கொள்ள முடியும்.
இதே வேளை சரியான தலைமைத்துவத்துடன் ஒரு புதிய கூட்டணி அமைக்கப்பட வேண்டுமென சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணசபையில் குழப்பங்கள் ஏற்பட்டபோது மாற்றுத் தலைமை தொடர்பான சிந்தனை சிலரிடையே எழுந்தது. ஆனால் தலைமைக்கு எவருமே அடையாளம் காட்டப்படவில்லை.தமிழ் அரசுக் கட்சி மீதான அதிருப்தித் தரப்பினர் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்க முயற்சி
இந்த நிலையில் தமிழரசுக்கட்சியுடன் முரண்பட்ட சிலர் அதற்கு மாற்றீடாக புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள் ளன. தமிழர்கள் மேன்மேலும் பிளவுபட்டு நலிவடையப் போவதையே இது எடுத்துக் காட்டுகின்றது.
அன்றிலிருந்து இன்றுவரை தமிழர்கள் ஒருபோதும் ஒற்றுமையாக இருந்ததில்லை. இதன் காரணமாகத் தோல்விகளை அவர்கள் எதிர்கொள்ள நேர்்ந்தது.
தோல்விகளிலிருந்து பாடம் படிக்கும்போதுதான் வெற்றிப்படிகளை நெருங்கமுடியும். தற்போதைய நிலவரத்தைப் பார்க்கும் போது தமிழர்கள் வெற்றிப் படிகளை நெருங்க எந்தவிதத்திலும் சந்தர்ப்பம் வாய்க்கப் போவதில்லை என்பது மிகத் தௌிவாகத் தெரிகின்றது.
கூட்டமைப்புக்கு மாற்றீடாக வேறொரு அணி உருவாகும்வரைத் தமிழ் மக்கள் கூட்டமைப்பின் மீதே நம்பிக்கை வைத்துச் செயற்பட்டாக வேண்டும். கூட்டமைப்பைப் பிளவு படுத்துவதால் தமிழ்மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்து விடுமென எவருமே நினைத்து விடக்கூடாது. மாறாக புதிய பிரச்சி ைனைகள் தோன்றிவிடும்.
தமிழர்கள் வெறும்உணர்ச்சி வேகத்துக்கு இரையாகாமல் அறிவு பூர்வமாகச் சிந் திக்கவேண்டிய தருணத்தில் உள்ளனர்.இதில் தவறிவிடுவார்களாயின் அவர்களது எதிர்காலமே பாழகிப்போய் விடும் அபாயமுண்டு.
தமிழ் மக்கள் பேரவையும் இந்த முன்னணிக்கு ஆதரவு தெரிவிக்குமென நம்பப்படுகிறது. தமிழ் மக்கள் பேரவை அமைக்கப்பட்டபோது அது கூட்டமைப்புக்கு எதிரான அமைப்பொன்றாகவே கருதப்பட்டது. ஆனால் கூட்டமைப் பைச் சேர்ந்த வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பேரவையுடன் இணைந்து கொண்டார்.
பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவராகவும் தெரிவு செய்யப்பட்டார். இவரைவிட தமிழரசுக் கட்சி தவிர்ந்த கூட்டமைப்பின் ஏனைய பங்காளிகளும் பேரவைக்குள் சங்கமமாகினர். அப்போது கூட்டமைப்பின் தலைமை இதைக் கண்டு கொள்ளவேயி்ல்லை. அரசியலுக்குள் நுழைகின்ற எண்ணம் பேரவைக்கு இல்லையென அதன் முக்கியஸ்தர்கள் அப்போது தெரிவித்தனர்.
அரசியல்வாதிகளின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை அரசியலில் ஈடுபடாதெனத் தெரிவித்த கருத்தைப் பலர் அப்போது நம்பவில்லை.தற்போது பேரவையின் கபட நோக்கம் அம்பலமாகியுள்ளது.
பேரவை அரசியல் செயற்பாடுகளில் கலந்துகொள்ளாதென வழங்கப்பட்ட உறுதிமொழி
தமிழர்களின் பிரச்சினைக ளுக்குத் தீர்வு காண்பதற்காகவே அரசியல் கலக்காத வகையில் பேரவை உருவாக்கப்பட்டதாகத் தெரிவித்தார்கள். இன்று அரசியல் கூட்டணிக்கு அந்தப் பேரவை ஆதரவு தெரிவிக்கின்றமை தமிழ்மக்களை ஏமாற்றுகின்றதொரு செயலாகக் கொள்ளத்தக்கதாகும். இத்தகையவர்கள் மக்களுக்கு விசுவாசமாக நடந்து கொள்வார்கள் என்பதை எந்த வகையிலும் நம்ப இயலாதுள்ளது. இதேவேளை தமிழ்மக்கள் பேரவையின் அரசியல் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் புளொட் அமைப்பு நடந்து கொண்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பாக பேரவையால் கூட்டப்பட்ட கூட்டத்தில் அந்தக் கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் எவரும் கலந்து கொள்ளாதது இதை உறுதி செய்துள்ளது. புளொட், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத் தக்கது.
இதேவேளை, வடக்கு மாகாண முதலமைச்சர் கூட்ட மைப்பிலிருந்து பிரிந்து சென்று கூட்டணி அமைத்த சுரேஷ் பிரேமச்சந்தி ரனை மறைமுகமாகச் சாடியுள்ளார். கட்சியின் நலன் கருதியே சுரேஷ் தனித்துப்போட்டியிடுவதாக அவர் கூறியிருப்பது கவனத்துக்குரியது. இதைவிட புதிய கூட்டணிக்கும் தமிழ் மக்கள் பேரவைக்கும் எந்தத் தொடர்பும் இல்லையெனக் கூறிய அவர், பேரவை கூட்டணியுடன்இணையாது எனவும் கூறியுள்ளார்.
முதலமைச்சர் தமது கருத்துக்களைச் சொல்லில் மட்டுமல்லாது செயலிலும் மக்களிடம் நிரூபித்துக் காட்டவேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது. அவர் தமது விசுவாசத் தன்மையை நிரூபிக்க வேண்டுமானால் உள்ளூராட்சித் தேர்தலின்போது கூட்டமைப்புக்கு ஆதரவான பரப்புரைகளி்ல ஈடுபட வேண்டும்.புதிய கூட்டணிக்கு எதிரான கருத்துகளைப் பகிரங்கமாகத் தெரிவிக்க வேண்டும்.
கூட்டமைப்பின் வெற்றிக்காக உழைப்பதே இவரது பிரதான கடமையாகவும் அமைந்திருத்தல் வேண்டும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது அவர் விட்ட தவறுகளுக்கு இதுவொரு பிராயச்சித்தமாகவும் அமையக் கூடும்.பேரவை குறித்த எதிர்பார்ப்பு காலப்போக்கில் பிசுபிசுத்துப் போனது
தமிழ் மக்கள் பேரவை தொடர்பாக ஆரம்பத்தில் பெரியதொரு எதிர்பார்ப்பு ஏற்படுத்தப்பட்டது. தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதே அதன் முக்கியமான நோக்கமெனவும் கூறப்பட்டது.தீர்வுத் திட்ட மொன் றையும் பேரவை தயாரித்திருந்தது. ஆனால் செயல்வடிவைப் பொறுத்தவரையில் எதையுமே அதனால் சாதிக்க முடியவில்லை என்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். தற்போது பேரவையிலும் பிளவுகள் தோன்றுவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன.
இதேவேளை தமிழ்த் தலைமை களது மோசமான அரசியல் நிலைப்பாட்டுக்கு முற்றுப் புள்ளி வைக்கவே புதிய கூட்டணி உருவாக்கப்பட்டதாக தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவரான கஜேந்திரகுமார் தெரிவித்திருக்கிறார். உள்ளூராட்சித் தேர்தல் இடம்பெறப்போகும் நிலையில்தான் தமிழ்த் தலைமைகளது அரசியல் நிலைப்பாடு மோசமான ஒன்றாக அவரது கண்களுக்குத் தெரி கின் றதா? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மேலும் இந்தக் கூட்டணிக்குக் கிடைக்கப்போகும் ஆதரவைப் பொறுத்தே அதன் மீதான நம்பகத் தன்மையை உறுதி செய்து கொள்ள முடியும்.
இதே வேளை சரியான தலைமைத்துவத்துடன் ஒரு புதிய கூட்டணி அமைக்கப்பட வேண்டுமென சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணசபையில் குழப்பங்கள் ஏற்பட்டபோது மாற்றுத் தலைமை தொடர்பான சிந்தனை சிலரிடையே எழுந்தது. ஆனால் தலைமைக்கு எவருமே அடையாளம் காட்டப்படவில்லை.தமிழ் அரசுக் கட்சி மீதான அதிருப்தித் தரப்பினர் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்க முயற்சி
இந்த நிலையில் தமிழரசுக்கட்சியுடன் முரண்பட்ட சிலர் அதற்கு மாற்றீடாக புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள் ளன. தமிழர்கள் மேன்மேலும் பிளவுபட்டு நலிவடையப் போவதையே இது எடுத்துக் காட்டுகின்றது.
அன்றிலிருந்து இன்றுவரை தமிழர்கள் ஒருபோதும் ஒற்றுமையாக இருந்ததில்லை. இதன் காரணமாகத் தோல்விகளை அவர்கள் எதிர்கொள்ள நேர்்ந்தது.
தோல்விகளிலிருந்து பாடம் படிக்கும்போதுதான் வெற்றிப்படிகளை நெருங்கமுடியும். தற்போதைய நிலவரத்தைப் பார்க்கும் போது தமிழர்கள் வெற்றிப் படிகளை நெருங்க எந்தவிதத்திலும் சந்தர்ப்பம் வாய்க்கப் போவதில்லை என்பது மிகத் தௌிவாகத் தெரிகின்றது.
கூட்டமைப்புக்கு மாற்றீடாக வேறொரு அணி உருவாகும்வரைத் தமிழ் மக்கள் கூட்டமைப்பின் மீதே நம்பிக்கை வைத்துச் செயற்பட்டாக வேண்டும். கூட்டமைப்பைப் பிளவு படுத்துவதால் தமிழ்மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்து விடுமென எவருமே நினைத்து விடக்கூடாது. மாறாக புதிய பிரச்சி ைனைகள் தோன்றிவிடும்.
தமிழர்கள் வெறும்உணர்ச்சி வேகத்துக்கு இரையாகாமல் அறிவு பூர்வமாகச் சிந் திக்கவேண்டிய தருணத்தில் உள்ளனர்.இதில் தவறிவிடுவார்களாயின் அவர்களது எதிர்காலமே பாழகிப்போய் விடும் அபாயமுண்டு.
தமிழர்கள் சிந்திக்க வேண்டிய தருணமிது....... வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்
Reviewed by Author
on
November 24, 2017
Rating:

No comments:
Post a Comment