அண்மைய செய்திகள்

recent
-

தன் உயிரை விட்டு தங்கையின் உயிரைக் காப்பாற்றிய சகோதரி: மனதை உருக்கும் சம்பவம் -


சிரியாவில் பயங்கரவாதிகளுக்கு எதிராக சிரிய அரசு நிகழ்த்திய இராசாயன தாக்குதலில், தன் உயிரைக் கொடுத்து தங்கை உயிரைக் காப்பாற்றிய சகோதரியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் உண்டாக்கியுள்ளது.

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுக்கும் ISIS பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் கடுமையான போரில் பொதுமக்கள் உட்பட ஏராளமான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர்.
சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள், அல்கொய்தா தொடர்பு பயங்கரவாதிகள் வசமுள்ள பகுதிகளில் ரஷிய வான்வழித் தாக்குதல்களின் உதவியுடன் தாக்குதல் நிகழ்த்தி சிரியா ராணுவம் அந்த பகுதிகளை மீட்டு வருகிறது.
அந்தவகையில், சிரியாவின் கிழக்கு கெளட்டா பகுதியில் கடந்த ஜனவரி மாதம் பொதுமக்களுக்கு எதிராக சிரிய அரசு தடை செய்த ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது.
இந்த இராசாயன தாக்குதலில் ஏராளமான பொதுமக்களும் குழந்தைகளும் பாதிக்கப்பட்டனர் பலர் கொல்லப்பட்டனர்.
அப்போது இராசாயன தாக்குதலில் பாதிப்படைந்த ஒரு சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தன் தங்கையை காப்பாற்றுவதற்காக தன் உயிரையும் பொருட்படுத்தாமல் செயற்கை ஆக்ஸிஜன் கொடுத்து கொண்டிருந்தார். ஆனால் அதிகப்படியான இராசாயன தாக்குதலால் அந்த சிறுமி உயிரிழந்தார்.
தன் உயிரைக் கொடுத்து தங்கை உயிரைக் காப்பாற்றிய சகோதரியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
தன் உயிரை விட்டு தங்கையின் உயிரைக் காப்பாற்றிய சகோதரி: மனதை உருக்கும் சம்பவம் - Reviewed by Author on February 27, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.