அண்மைய செய்திகள்

recent
-

குழந்தைகள் உட்பட 10 பேர் பலி -வீட்டின் மீது விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானம்:


பிலிப்பைன்சில் சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்று வீட்டின் மீது விழுந்து நொறுங்கியதால் 10 பேர் பலியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிலிப்பைன்சில் PA-23 என்ற சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்று ப்ளாரிடல் விமான நிலைய ரன் வேயிலிருந்து விமான பயணிகள் உட்பட 5 பேருடன் உள்ளூர் நேரப்படி காலை 11.21 மணியளவில் புறப்பட்டுள்ளது.
புறப்பட்ட சிறிது நேரத்திலே 11.30 மணியளவில் அருகில் இருந்த கிராமத்தில் விழுந்து நொறுங்கியுள்ளது.




விழுந்து நொறுங்கிய விமானம் ஒரு வீட்டின் மீது விழுந்ததால் வீட்டில் இருந்த 3 குழந்தைகள் மற்றும் 2 பெண்கள் மற்றும் விமானத்தில் பயணித்த 5 பேர் என மொத்தம் 10 பேர் பலியாகியுள்ளனர்.
இது குறித்து அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவிக்கையில், Lite Express நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று திடீரென்று தொழில்நுட்ப பிரச்சனை ஏற்பட்டதால் கிழே விழுந்து நொறுங்கியுள்ளது.

விமானத்தில் இரண்டு விமானிகள் மற்றும் பயணிகள் என மொத்தம் 5 பேர் பயணித்ததாகவும், அந்த விமானம் வீட்டின் மீது விழுந்த போது, உள்ளே இருந்த குடும்பத்தினர் சாப்பிட்டுக் கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

குழந்தைகள் உட்பட 10 பேர் பலி -வீட்டின் மீது விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானம்: Reviewed by Author on March 18, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.