அண்மைய செய்திகள்

recent
-

மக்களின் விருப்போடு 03 பிரதேச சபைகளை கைப்பற்றி---அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

மன்னாரின், மன்னார் பிரதேச சபை ,முசலி பிரதேச சபை , மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகியவற்றை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்.

இன்று இடம்பெற்ற மாந்தை மேற்கு பிரதேச சபைக்கான தவிசாளர் தெரிவில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஆசீர்வாதம் சந்தியோகு ( செல்லத்தம்பு ஐயா) தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார் அதுபோல

நேற்று இடம்பெற்ற முசலி பிரதச சபைக்கான தவிசாளர் தெரிவில் சுபிகான் ஆசிரியர் தெரிவு செய்யப்பட்டார் பிரதி தவிசாளராக முஹூசின் ரைசுதீன் ஆசிரியர் தெரிவு செய்யப்பட்டு இரண்டாவது தடவையாக முசலி பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சதிகளை முறியடித்து கைப்பற்றியது,

மன்னார் பிரதச சபைக்கான தவிசாளர் தெரிவில் முஜாஹிர் அவர்கள் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார் பிரதி தவிசாளராக இஸ்ஸதீன் தெரிவு செய்யப்பட்டு முதன் முறையாக கைப்பற்றியது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் இவ் வெற்றியானது மக்களின் வெற்றியே ஆகும்.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவர் கெளரவ றிசாட் பதியுதீன் அவர்களின் வழிகாட்டலில் பலரின் முயற்ச்சியில் மக்களின்  விருப்போடு மூன்று பிரதேச சபைகளை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்.மக்களுக்கும் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்கும் நமது வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும்  எமது சேவையால் நன்றிகளை தெரிவிப்போம்  எனதும் எனது கட்ச்சி சார்ந்தும்  நன்றியுடன்.




மக்களின் விருப்போடு 03 பிரதேச சபைகளை கைப்பற்றி---அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் Reviewed by Author on April 12, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.