சிறுநீரகத்தில் 3000 கற்கள்: தொடர் முதுகுவலியால் தவித்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி -
சீனாவின் ஜியாங்ஸு மகாணத்தில் உள்ள ஜாங்ஸு பகுதியில் உஜின் என்ற மருத்துவமனையில், ஷாங்(56) எனும் பெண் தனக்கு தொடர் முதுகுவலி இருப்பதாக கூறியுள்ளார்.
மேலும், சில ஆண்டுகளாகவே இந்த முதுகுவலி இருப்பதாக அவர் கூறியதைத் தொடர்ந்து, மருத்துவர்கள் அவரை பரிசோதனைக்கு உட்படுத்தினர். அவரது வலப்புற சிறுநீரகத்தை பரிசோதித்தபோது, அதில் ஏராளமான சிறுநீரக கற்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, Scan செய்ததில் ஆயிரக்கணக்கான கற்கள் இருப்பதை அறிந்த மருத்துவர்கள், உடனடியாக ஷாங்கிற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு கற்களை வெளியேற்றினர்.
அந்த கற்களை மருத்துவர்கள் ஒரு கண்ணாடி குடுவையில் போட்டு எண்ணியபோது, மொத்தமாக 2,980 சிறுநீரக கற்கள் இருப்பது தெரிய வந்தது. இவ்வளவு கற்களுடன் இந்த பெண் எப்படி சில வருடங்கள் இருந்தார் என்பது மருத்துவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.
இதற்கு முன்பு இந்தியரான தன்ராஜ் என்பவரின் சிறுநீரகத்தில் இருந்து 1,72,155 கற்கள் அகற்றப்பட்டது. அது இதுவரை கின்னஸ் புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளது.
சிறுநீரகத்தில் 3000 கற்கள்: தொடர் முதுகுவலியால் தவித்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி -
Reviewed by Author
on
July 27, 2018
Rating:

No comments:
Post a Comment