பிரித்தானியாவில் ஓங்கி ஒலித்த தமிழர்களின் குரல்.....
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த அரசாங்கத்தினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி ஆரம்பிக்கபட்ட போராட்டம் 500 நட்களாக மேற்கொள்ளபட்டாலும் தற்போதைய
அரசாங்கத்தால் இதுவரை எந்த வித காத்திரமான முடிவுகளும் மேற்கொள்ள படாத நிலையில்.
500 வது நாட்களாகியும் இலங்கையில் நீதி, நியாயம் கிடைக்காமல் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கும் வேளையில் அவர்களின் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாக நேற்று (01.07.2018 பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்களால் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தபட்டது இந்த போரட்டத்தில் பெருமளவான தமிழ் மக்கள் கலந்து கொண்டும் கைகளில் காணமல் ஆக்கப்பட்டோரின் புகைப்படத்தை தாங்கியபடியும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கோசம் எழுப்பினர்.
பல புலம்பெயர் அமைப்புக்கள் இப்போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவில் ஓங்கி ஒலித்த தமிழர்களின் குரல்.....
Reviewed by Author
on
July 02, 2018
Rating:

No comments:
Post a Comment