அண்மைய செய்திகள்

recent
-

தமிழர்கள் வரலாற்றில் உயரிய மனிதனுக்கு அஞ்சலி செலுத்திய நீதிபதி இளஞ்செழியன் -


1972 இல் ஒரு தனிமனிதனாக மொழியுரிமைப் போராட்டத்தில் சர்வதேசம் வரை சென்ற சிரேஸ்ட சட்டத்தரணி செல்லையா கோடிஸ்வரனின் இறுதி அஞ்சலி நிகழ்வில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளம்செழியன் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
கொழும்பில் 85 வது வயதில் காலமான அமரர் கோடிஸ்வரனின் இறுதி கிரிகைகள் உவர் மலை 22 இராணுவத்தலைமையக வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்றுள்ளது.
திருகோணமலை இந்து மயானத்தில் நேற்று மாலை உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரது உடலம் வைக்கப்பட்டிருந்த வீட்டிற்கு சென்ற நீதிபதி தனது அஞ்சலி செலுத்தியதுடன் உறவினர்களுக்கு தனது ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.

தமிழர் மொழியுரிமைப்போராட்டத்தில் அழியாத இடத்தை பிடித்த இவர் தனிச்சிங்கள மொழிச்சட்டத்தில் பாதிக்கப்பட்ட உத்தியோகதத்தர்கள் சார்பாக இலங்கை மேல்நீதிமன்றத்தில் வழக்கு நிராகரிக்கப்பட்ட நிலையில் லண்டன் மேல் நீதிமன்றில் மேன்முறையீடு செய்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இறுதி அஞ்சலி நிகழ்வில் ரெலோ கட்சியின் முக்கியஸ்தர்களான சட்டத்தரனி ஸ்ரீஸ்காந்தா,சிவாஜிலிங்கம், தமிழரசுகக்கட்சியின் மாவட்டத் தலைவர் ஏ.குகதாசன்,மற்றும் வைத்திய அதிகாரிகள்,பொது அமைப்பு பிரதிநிதிகள்,சட்டத்தரணிகள் என பலரும் வருகை தந்து அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
தமிழர்கள் வரலாற்றில் உயரிய மனிதனுக்கு அஞ்சலி செலுத்திய நீதிபதி இளஞ்செழியன் - Reviewed by Author on February 21, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.