அண்மைய செய்திகள்

recent
-

இரச மாசடைதலால் வெகுவாக பாதிக்கப்பட்ட பூமி-அதிர்ச்சி தகவல்


பூமியை சுமார் 66 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் Chicxulub எனும் இராட்சத விண்கல் தாக்கியதாக ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாகவே பூமியில் வாழ்ந்த இராட்சத உயிரினமான டைனோசர்கள் முற்றாக அழிந்தன எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இப்படியிருக்கையில் பூமியை வெகுவாக பாதித்த மற்றுமொரு இயற்கை அனர்த்தம் தொடர்பில் புதிய தகவல் ஒன்றினை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

அதாவது Chicxulub விண்கல் பூமியை தாக்குவதற்கு முன்னரே இரச மாசடைதலுக்கு பூமி முகம்கொடுத்திருந்ததாகவும் இதனால் பூமியிலிருந்து உயிரினங்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கியருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chicxulub விண்கல் மோதுவதற்கு சுமார் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னர் பாரிய எரிமலை வெடிப்பு ஏற்பட்டிருந்ததாகவும் இதன் காரணமாகவே குறித்த இரச மாசடைதலுக்கு பூமி முகம் கொடுக்கவேண்டியிருந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இரச மாசடைதலால் வெகுவாக பாதிக்கப்பட்ட பூமி-அதிர்ச்சி தகவல் Reviewed by Author on December 18, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.