அண்மைய செய்திகள்

recent
-

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் -


கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் வீடு திரும்பியுள்ளார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்னர் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் கடந்த வியாழனன்று அவர் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து செயிண்ட் தாமஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில், சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டவர் தற்போது வீடு திரும்பியுள்ளார்.
எனினும் உடல்நிலை தேறிய பின்னரே தன்னுடைய வழக்கமான பணிக்கு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள போரிஸ் ஜான்சனின் காதலி, உருக்கமாக டுவிட் செய்துள்ளார்.
நிறை மாத கர்ப்பிணியான அவர் கொரோனா அறிகுறிகள் இருந்ததால் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் - Reviewed by Author on April 13, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.