அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாந்தை மேற்கில் சிறப்பாக இடம் பெற்ற இரத்ததான முகாம். Photos&Video)

இலங்கை இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் ஏற்பாட்டில் அடம்பன் பிராந்திய சுகாதார பணிமனையின் ஒழுங்கமைப்பில் இன்று வெள்ளி கிழமை காலை தொடக்கம் மாலை வரை இரத்ததான முகாம் இடம் பெற்றது.

 மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ். கேதீஸ்வரன் தலைமையில், அடம்பன் பிராந்திய சுகாதார பணிமனை பணிப்பாளர் கே.சுதாகரன் மற்றும் வைத்தியர்களின் பங்களிப்புடன் குறித்த இரத்த தான முகாம் சிறப்பாக இடம் பெற்றது. குறித்த இரத்ததான முகாமில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் கலந்து கொண்டதுடன் பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள், அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், கழக அங்கத்தவர்கள் பொலிஸார் என பலரும் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் நிருபர்)
 (08-05-2020)









மன்னார் மாந்தை மேற்கில் சிறப்பாக இடம் பெற்ற இரத்ததான முகாம். Photos&Video) Reviewed by Author on May 08, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.