மட்டக்களப்பு – வாழைச்சேனை இடம்பெற்ற விபத்து! 16 வயது இளைஞன் உயிரிழப்பு
மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வாகனேரியில் இன்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தொன்றில் 16 வயதுடைய இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
சுற்றுலா விடுதி வாகநேரியைச் சேர்ந்த நா.ததுஷன் வயது (16) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர், வாகநேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் ஆலய உற்சவத்தில் கலந்து கொண்டதன் பின்னர் தமது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணத்த போது மோட்டார் சைக்கிளில் வேக கட்டுப்பாட்டினை மீறி பாதையை விட்டு விலகியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பாக வாழைச்சேனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Reviewed by Author
on
August 20, 2020
Rating:



No comments:
Post a Comment