மன்னார் பகுதியில் இராணுத்தினரிடம் சிக்கிய நால்வர்
புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வீதி சோதனை சாவடியில் சோதனை செய்த போது குறித்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மதவாச்சி மன்னார் வீதியில் சிறிய ரக லொறி ஒன்றை சோதனையிட்ட போது அதில் இருந்து 205 கிலோ மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவை சுமார் 8 இலட்சம் ரூபா பெறுமதியுடையவை என இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் குச்சிகுளம் வீதியில் வைத்து 104 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் பகுதியில் இராணுத்தினரிடம் சிக்கிய நால்வர்
Reviewed by Author
on
September 24, 2020
Rating:

No comments:
Post a Comment