அண்மைய செய்திகள்

recent
-

யட்டியாந்தோட்டையில் தீ விபத்து: கடை, களஞ்சியசாலை முற்றாக சேதம்!

யட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹற்றன் கொழும்பு பிரதான வீதியில் யட்டியாந்தோட்டை மீகாவெல்ல பகுதியில் அமைந்துள்ள கடையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் தீ விபத்தினால் குறித்த கடையும், அதன் அருகில் இருந்த களஞ்சியசாலையும் முற்றாக எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 இதேவேளை, இவ்விபத்தில் எவருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதேச பொது மக்கள், அவிசாவளை மற்றும் சீத்தாவக்க ஆகிய பகுதிகளில் உள்ள தொழில்சாலைகளின் தீயணைப்புப் பிரிவினரும் ருவான்வெல்ல பிரதேச சபையின் தீயணைப்புப் பிரிவினரும் யட்டியாந்தோட்டை பொலிஸாரும் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

 எனினும் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் என அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை என்றும் மின் ஒழுக்கு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது. இந்நிலையில், தீ விபத்துக்கான காரணம், சேத விபரங்கள் தொடர்பாக யட்டியாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யட்டியாந்தோட்டையில் தீ விபத்து: கடை, களஞ்சியசாலை முற்றாக சேதம்! Reviewed by Author on October 02, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.