யட்டியாந்தோட்டையில் தீ விபத்து: கடை, களஞ்சியசாலை முற்றாக சேதம்!
இதேவேளை, இவ்விபத்தில் எவருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதேச பொது மக்கள், அவிசாவளை மற்றும் சீத்தாவக்க ஆகிய பகுதிகளில் உள்ள தொழில்சாலைகளின் தீயணைப்புப் பிரிவினரும் ருவான்வெல்ல பிரதேச சபையின் தீயணைப்புப் பிரிவினரும் யட்டியாந்தோட்டை பொலிஸாரும் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
எனினும் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் என அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.
தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை என்றும் மின் ஒழுக்கு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.
இந்நிலையில், தீ விபத்துக்கான காரணம், சேத விபரங்கள் தொடர்பாக யட்டியாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யட்டியாந்தோட்டையில் தீ விபத்து: கடை, களஞ்சியசாலை முற்றாக சேதம்!
Reviewed by Author
on
October 02, 2020
Rating:

No comments:
Post a Comment