விளக்கீட்டிலும் தீபம் ஏற்றத் தடை- யாழ். பல்கலை மாணவன் கைது!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலின் முன்பாக இராமநாதன் வீதியில் மாலை ஆறு மணிக்கு தீபங்களை ஏற்றுவதற்கு மாணவர்கள் சிட்டிகளுடன் தயாராகியிருந்தனர்.
இதனைறிந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அந்த இடத்துக்குச் சென்று தீபங்கள் ஏற்றுவதற்கு அனுமதியில்லை என்று தெரிவித்ததுடன் அறிவுறுத்தலை மீறினால் கைதுசெய்யப்படுவீர்கள் என பொலிஸார் எச்சரித்திருந்தனர்
இந்நிலையில், நீண்ட இழுபறியின் பின்னர் இரவு 7.45 மணியளவில் பொலிஸாரின் தடைகளை மீறி பல்கலை வாயிலில் விளக்கேற்ற முற்பட்டபோது குறித்த மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
விளக்கீட்டிலும் தீபம் ஏற்றத் தடை- யாழ். பல்கலை மாணவன் கைது!
Reviewed by Author
on
November 29, 2020
Rating:

No comments:
Post a Comment