பொதுமக்கள் தமக்கான பொறுப்புணர்வுகளை மறந்து செயற்படுகின்றனர் – ஜனாதிபதி குற்றச்சாட்டு
மேல் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டபோது, பலர் கொழும்பிலிருந்து காலி, எல்ல போன்ற இடங்களுக்குச் சென்றதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இது மிகவும் பொறுப்பற்றது என தெரிவித்த ஜனாதிபதி, பிரச்சினையை தீர்க்கும் பொறுப்பை அரசாங்கத்தால் மட்டுமே எடுக்க முடியாது என்றும் கூறினார்.
வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த அவர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை அதிகாரிகள் பொதுமக்களுக்கு விளக்க வேண்டும் என்று ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
அத்தோடு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்தால் எவரும் வைத்தியசாலைக்கு செல்லக்கூடாது என்றும் அதற்கு பதிலாக அவர்கள் சுகாதார அதிகாரிகளைத் தொடர்புகொண்டு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பொதுமக்கள் தமக்கான பொறுப்புணர்வுகளை மறந்து செயற்படுகின்றனர் – ஜனாதிபதி குற்றச்சாட்டு
Reviewed by Author
on
November 02, 2020
Rating:

No comments:
Post a Comment