அண்மைய செய்திகள்

recent
-

பௌத்தசிங்களப் பேரினவாதத்தின் திட்டமிட்ட இனவாெழிப்பை தடுத்துநிறுத்த திருகோணமலை வாழ் மக்களே கவனத்தில் எடுங்கள்.

திருமலையில் வாழ்கின்ற பலர் காணியற்ற நிலையில் வாழ்கின்றபோதும் பல நூற்றுக்கணக்கான ஹெக்டேயர் நிலமானது புதிய பெயரிலான விகாரைகளுக்கு 30 ஆண்டு குத்தகை என்ற பெயரில் வழங்கப்படவுள்ளன . 

உரிய தரப்புகள் 6 வாரங்களுக்குள் எதிர்ப்பு தெரிவிக்காவிடின் திருகோணமலையிலுள்ள குறிப்பிட்ட நில உரிமை மாற்றமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது . 2020.10.02 அன்று, வெளியிடப்பட்ட வர்த்தமானியின் (2196ம் இலக்கம், பகுதி III-காணி) அடிப்படையில் , திருகோணமலை மாவட்டத்தில் , குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 
 1.தென்னைமரவாடி 
 2.புல்மோட்டை 
 3.திரியாய் 
 4.கும்புருப்பிட்டி ஆகிய பகுதிகளில் 07 பௌத்த அமைப்புக்களுக்கு, 126.0673 கெக்டயர் (311.51908257 ஏக்கர்) காணி 30 வருட கால சமய வழிபாட்டு தேவைகளுக்காக வழங்கப்படவுள்ளது. 02.10.2020 ம் திகதியிலிருந்து ஆறுவாரங்களுக்குள் (13.11.2020) ஆட்சேபனைகள் தெரிவிக்கப்படாதவிடத்து இக்காணிகள் குறிப்பிட்ட அமைப்புகளுக்கு கையளிக்கப்படும்.

 ஒவ்வொரு நபரும் , அமைப்புக்களும் ஆட்சேபனைகளை பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைப்பதன் ஊடாக தமது எதிர்ப்புக்களை தெரிவிக்கலாம் .
 M. L. A. Sanjeewa, 
Assistant Land Commissioner For Land Commissioner General Land Commissoner General's Department, 
No. 1200/6, Land Secretariat, '
Mihikatha Medura', 
Rajamalwatta Road,
 Battaramulla.

 -நன்றி, தங்கவேலு.

பௌத்தசிங்களப் பேரினவாதத்தின் திட்டமிட்ட இனவாெழிப்பை தடுத்துநிறுத்த திருகோணமலை வாழ் மக்களே கவனத்தில் எடுங்கள். Reviewed by Author on November 03, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.