யாழில் 1,913 வீடுகள் சேதம்!
கலந்துரையாடலின் பின்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கணபதிப்பிள்ளை மகேசன் இவ்வாறு தெரிவித்துளார்.
அத்தோடு யாழ்.மாவட்டத்தில் தற்போது 31 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 1,025 குடும்பங்களை சேர்ந்த 3,058 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், 39 வீடுகள் முழுமையாகவும், 1,913 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துளதாகவும் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
மேலும் தொண்டைமனாறு தடுப்பு அணையின் 8 கதவுகள் திறக்கப்பட்ட போதும் கடல் மட்டம் உயர்ந்துள்ளதால் நீர் வடிந்து ஓடுவது தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், பிற்பகல் வரை மழை தொடருமாக இருந்தால் வெள்ள நிலைமை அதிகரிக்கும் எனவும் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழில் 1,913 வீடுகள் சேதம்!
Reviewed by Author
on
December 04, 2020
Rating:

No comments:
Post a Comment