அண்மைய செய்திகள்

recent
-

தப்பியோடிய கொரோனா தொற்று உறுதியான இளைஞர் பிடிபட்டார்!

தப்பிச் சென்ற கொரோனா தொற்று உறுதியான இளைஞர் மாகொல பிரதேசத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவருக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சைகளை அடுத்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று உறுதியான இளைஞர் ஒருவர் தப்பிச் சென்றுள்ள நிலையில் குறித்த இளைஞரை கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொது மக்களிடம் உதவி கோரியுள்ளனர். மாகொல வடக்கு, தேவலய வீதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

 இவ்வாறு தப்பியோடிய இளைஞருக்கு பி.சி.ஆர். சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதன் முடிவுகள் வெளியாகும் வரை அவர் வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவர் வீட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். குறித்த இளைஞர் தொடர்க தகவல்கள் தெரிந்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் அல்லது பொலிஸாரின் அவசர எண்ணிற்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கோண்டுள்ளனர்.

தப்பியோடிய கொரோனா தொற்று உறுதியான இளைஞர் பிடிபட்டார்! Reviewed by Author on December 27, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.