மிகவும் ஆபத்தான ஐந்தாவது அலை – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை
வுகான் வைரஸ்களை விட அல்பா டெல்டாவினால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன என எச்சரித்துள்ள செனால் பெர்ணான்டோ இந்த வைரஸ்கள் வெளிப்படுத்தும் தடுப்பூசிகளிற்கான எதிர்பாற்றலையும் நாங்கள் கருத்தில்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.
இரண்டுடோஸ்களை செலுத்திக்கொண்ட பின்னரும் பாதி;க்கப்படுபவர்கள் உயிரிழப்பவர்கள் குறித்து தகவல்கள் வெளியாகும் காலத்தில் நாங்கள் இருக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
நாடு தற்போது மிகவும் ஆபத்தான உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய வலுவான கொரோனா வைரசினை எதிர்கொள்கின்றது என தெரிவித்துள்ள செனால்பெர்ணான்டோ இதன் காரணமாக நாங்கள் நிலைமையை உணர்ந்து இன்னுமொரு பிறழ்வடைந்த வைரசினை எதிர்கொள்ள தயாராகவேண்டும்- இந்த பிறழ்வடைந்த வைரஸ் ஐந்தாவது அலைக்கு வித்திடலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது டெல்டாவை விட ஆபத்தானதாக காணப்படக்கூடும் நாட்டினால் இதனை எதிர்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மிகவும் ஆபத்தான ஐந்தாவது அலை – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை
Reviewed by Author
on
August 25, 2021
Rating:

No comments:
Post a Comment