அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டமும் முடங்கியது.

நாடளாவிய ரீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (20) இரவு முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையிலான 10 நாட்கள் நாட்டை முழுமையாக முடக்கியுள்ள நிலையில் மன்னார் மாவட்டமும் முடங்கியுள்ளது. இன்றைய தினம் சனிக்கிழமை மாவட்டத்தில் அத்தியாவசிய சேவைகளை தவிர ஏனைய செயற்பாடுகள் முடங்கியுள்ளது. 

 அரச தனியார் போக்குவரத்துச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. எனினும் நடமாடும் அத்தியாவசிய சேவைகள் இடம்பெற்று வருகின்றது.மீனவர்கள் கடற்தொழிலுக்கு சென்றுள்ளனர். மேலும் மருந்தகம்,வைத்தியசாலை,எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் செயற்பாடுகள் வழமையான போல் இடம்பெற்று வருகின்றது. பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
                 











மன்னார் மாவட்டமும் முடங்கியது. Reviewed by Author on August 21, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.