காணிப் பிரச்சினையில் குடும்பத்தலைவர் உயிரிழப்பு – மகள் படுகாயம்: யாழில் சம்பவம்
இந்த வாய்த்தர்க்கம் பின்னர் கைகலப்பாக மாறியதில் குறித்த நபரும் அவரது மகளும் காயமடைந்த நிலையில், சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு அயல் வீட்டில் உள்ளவர்களின் முச்சக்கர வண்டி மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
எனினும் வைத்தியசாலைக்கு செல்லும் வழியில் அவர் மரணமடைந்துள்ளார். இதனையடுத்து, தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மகள் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் இராசநாயகம் ரெஜியானந்தன் (வயது 49) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
காணிப் பிரச்சினையில் குடும்பத்தலைவர் உயிரிழப்பு – மகள் படுகாயம்: யாழில் சம்பவம்
Reviewed by Author
on
August 25, 2021
Rating:

No comments:
Post a Comment