மன்னார் தாராபுரம் துருக்கி சிட்டி பகுதியில் அமைந்துள்ள கொரோனா இடை நிலை சிகிச்சை நிலையத்திற்கு ஒரு தொகுதி அத்தியாவசிய பொருட்கள் கையளிப்பு.
இலங்கை தேவ சபைகளின் சங்கத்தின் ஏற்பாட்டில்,நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு இடை நிலை சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்ற வர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மாகாண ரீதியாக வழங்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு அங்கமாக வட பிராந்திய தேவ சபையின் ஏற்பாட்டில் முதற்கட்டமாக மன்னார் மாவட்டத்தில் மன்னார் தாராபுரம் துருக்கி சிட்டி பகுதியில் அமைந்துள்ள கொரோனா இடை நிலை சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா தொற்றாளர்களின் நலனை கருத்தில் கொண்டு நூறு அத்தியாவசிய உலர் உணவு பொதிகள் மற்றும் சுகாதார பொருட்கள் உள்ளடங்களாக ஒரு தொகுதி பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் வைத்து, வட பிராந்திய தேவ சபையின் ஊழியர்களினால் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் இடம் கையளிக்கப்பட்டது. இதன் போது வைத்திய கலாநிதி ரி.ஒஸ்மன் டெனி மற்றும் வைத்திய கலாநிதி திருமதி சிறிமதி ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் தாராபுரம் துருக்கி சிட்டி பகுதியில் அமைந்துள்ள கொரோனா இடை நிலை சிகிச்சை நிலையத்திற்கு ஒரு தொகுதி அத்தியாவசிய பொருட்கள் கையளிப்பு.
Reviewed by Author
on
September 14, 2021
Rating:
Reviewed by Author
on
September 14, 2021
Rating:


No comments:
Post a Comment