அண்மைய செய்திகள்

recent
-

கொழும்பில் 30 வயதிற்கு மேற்பட்டோருக்கு Booster தடுப்பூசி

கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 30 வயதிற்கு மேற்பட்டோருக்கு இன்று (10) முதல் Booster தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது. Booster தடுப்பூசியாக Pfizer தடுப்பூசியே வழங்கப்படவுள்ளது. 

 அதற்கமைய, ஏற்கனவே கொழும்பு நகர எல்லைக்குட்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்டது போன்று, தகுதிவாய்ந்த அனைவருக்கும் குறுந்தகவல் மூலம் திகதி, நேரம் ஆகிய தகவல்கள் அனுப்பி வைக்கப்படுமென கொழும்பு மாநகர சபை பிராந்திய தொற்றுநோயியல் நிபுணர் தினு குருகே தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டில் மேலும் 22 COVID மரணங்கள் பதிவாகியுள்ளன. மரணமடைந்த 22 பேரில் 13 ஆண்களும் 09 பெண்களும் அடங்குவதுடன், 60 வயதிற்கு மேற்பட்ட 16 பேரும் அடங்குகின்றனர். இதற்கிணங்க, இலங்கையில் இதுவரை 14,555 COVID மரணங்கள் பதிவாகியுள்ளன.

கொழும்பில் 30 வயதிற்கு மேற்பட்டோருக்கு Booster தடுப்பூசி Reviewed by Author on December 10, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.