அண்மைய செய்திகள்

recent
-

பெண்களுக்கான விசேட செயல் திட்டம் மன்னாரில் நிறைவு

பெண்களுக்கு எதிரான வன்முறையை இப்போதே நிறுத்துவோம் எனும் தொணிப்பொருளில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் அனுசரணையில் ofERR நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட 10 நாள் செயல்வாத நிகழ்சித்திட்டத்தின் இறுதிநாள் நிகழ்வு மன்னார் தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை 10 மணியளவில் இடம் பெற்றது மன்னார்,வவுனியா,முல்லைதீவு மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட 16 செயல் வாத நிகழ்சியை ஒன்றிணைத்து இன்றைய தினம் குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது 

 குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக சட்டத்தரணி திருமதி.மியூரின் கனியூட் அமர்நாத் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக உள்ளூராட்சிமன்றங்களின் தவிசாளர்கள்,செயளாலர்கள் மற்றும் OFerr நிறுவனத்தின் தலைவி செல்வி சூரியகுமாரி மற்றும் சன சமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள்,நகரசபை பிரதேச சபை பெண் உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர் குறித்த செயல்வாத நிகழ்வில் பிரதம விருந்தினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களால் பெண்கள் வன்முறைக்கு எதிரான விசேட சொற்பொழிவுகள் மற்றும் உரைகள் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடதக்கது 
                 









பெண்களுக்கான விசேட செயல் திட்டம் மன்னாரில் நிறைவு Reviewed by Author on December 11, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.