அண்மைய செய்திகள்

recent
-

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் தந்தை பலி - மகன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் !

மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதானவீதி கல்லடி விபுலானந்தா இசை நடனக் கல்லூரிக்கு முன்பாக மோட்டார் சைக்கிள் மீது கொள்கலன் வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகனும் தூக்கி வீசப்பட்டதையடுத்து பின்னால் வந்த உழவு இயந்திரத்தில் சிக்குண்டதில் தந்தை உயிரிழந்துள்ளார். 

விபத்தில் படுகாயமடைந்த மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். நேற்று (22) மாலை 5 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆரையம்பதியைச் சேர்ந்த 50 வயதுடைய சிவராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் படுகாயமடைந்த மகன் மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். காத்தான்குடி பகுதியில் இருந்து மட்டக்களப்பை நோக்கி மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த தந்தையும் மகனும் இசை நடன கல்லூரிக்கு முன்பாக வேளாண்மை வெட்டும் இயந்திரம் ஒன்றை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் ஒன்றை முந்திச் செல்ல முயற்சித்த போது பின்னால் வந்த கொள்கலன் வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கொள்கலன் வாகனத்தின் சாரதி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் தந்தை பலி - மகன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் ! Reviewed by Author on January 23, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.