அண்மைய செய்திகள்

recent
-

காற்றாலை விடயத்தில் நாங்கள் மன்னார் மக்களின் பக்கமே நிற்போம் -பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான்

காற்றாலை மின் நிலையம் சம்பந்தமாக மக்களுடைய எதிர்ப்புகளை அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளோம் ஆனால் காற்றாலை எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்ற எந்த திட்டங்களையும் நாட்டுக்குள் கொண்டு வர மாட்டோம் இலங்கையில் எங்கெங்கு காற்றாலை அமைக்க பொருத்தமான இடம் இருக்கிறதோ அந்த இடங்களை பார்த்து தான் காற்றாலைகளை அமைத்திருக்கிறோம் என்று தங்களுக்கு உயர் மட்டத்தில் தெரிவிக்கப்படுவதாக மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார் 

 காற்றாலை திட்டத்தின் விரிவுபடுத்தலுக்கு எதிராக மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக பல போராட்டங்கள் இடம் பெற்றுவருகின்ற நிலையில் குறித்த விடயம் தொடர்பாக மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய காதர் மஸ்தானிடம் கேள்வி எழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில் நாங்கள் தொடர்ச்சியாக நான் மாத்திரமல்ல இங்குள்ள ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் நடக்கின்ற அதி உயர் கூட்டங்களில் இந்த காற்றாலை பிரச்சனை தொடர்பாக தெரிவித்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் எங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது 

இந்த காற்றாலை அமைக்கப்படுவதனால் இப்பொழுதும் எதிர்காலத்திலும் பெரிய பாதிப்பு இல்லை என சொல்லப்படுகிறது ஆனால் மக்கள் தொடர்ச்சியாக இதற்கு எதிராக போராடிக்கொண்டு இருக்கிறார்கள் அதற்கு எதிராக பல போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள் வரும் வாரத்தில் கூட பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாக நான் அறிகிறேன் அதை எல்லாம் நாங்கள் உயர் மட்டத்திற்கு கொண்டு செல்ல இருக்கிறோம் அதே நேரம் மக்களுடைய நிலைப்பாட்டையும் உயர் மட்டத்துக்கு வெளிப்படுத்துகின்றோம் அதோடு காற்றாலை விடயத்தில் நாங்கள் மக்களுடன் இருப்போம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தார்

காற்றாலை விடயத்தில் நாங்கள் மன்னார் மக்களின் பக்கமே நிற்போம் -பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் Reviewed by Author on August 28, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.