விருந்துக்கு அழைத்து தம்பதி மீது கத்தி குத்து மனைவி பலி..!
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, பெண்ணின் நண்பர் ஒருவரினால் குறித்த தம்பதியை விருந்திற்கு அழைப்பதாக குறிப்பிட்டு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
பின்னர் குறித்த பெண் மற்றும் அவரது கணவர் உட்பட இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று பொருபனபாலத்திற்கு அருகில் நின்றுகொண்டிருந்தபோது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மேற்படி கணவன், மனைவி மீது கத்தியால் தாக்கியுள்ளார்.
இதன்போது காயமடைந்த பெண், பெண்ணின் கணவர் மற்றும் தாக்குதலை மேற்கொண்ட நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலத்த காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 34 வயதுடைய ஒருவர் எனவும் அவர் விகாரை வீதி, பொரலஸ்கமுவ பிரதேசத்தை ஒருவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரில் ஒருவர் பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொரலஸ்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
விருந்துக்கு அழைத்து தம்பதி மீது கத்தி குத்து மனைவி பலி..!
Reviewed by Author
on
September 24, 2022
Rating:

No comments:
Post a Comment