அண்மைய செய்திகள்

recent
-

பளுதூக்கல் போட்டியில் யாழ் வீரன் Kunam Pushaனின் தொடரும் தேசிய சாதனைகள்

தேசிய ரீதியில் கடந்த 29.10.2022 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற பளுதூக்கல் போட்டியில் 25 மாவட்டங்களையும் சேர்ந்த 56 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து ஒரே ஒருவராக யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியை சேர்ந்த சற்குணராசா புசாந்தன் கலந்து கொண்டு மூன்று பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் மூன்றிலும் வென்று , மூன்று தங்க பதக்கங்களை பெற்றுக்கொண்டுள்ளார். 120 கிலோவிற்கு மேற்பட்டோருக்கான பிரிவில் கலந்து கொண்ட இவர்,

 🏋‍♂️ squat பிரிவில் 335 கிலோ கிராமையும் , 
🏋‍♂️ benchpress பிரிவில் 183 கிலோ கிராமையும், 
🏋‍♂️ deadlift பிரிவில் 275 கிலோ கிராமையும் தூக்கி வெற்றி பெற்றுள்ளார்.

 இதில் squat மற்றும் deadlift , benchpress ஆ௧ிய மூன்று பிரிவுகளிலும் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார். அத்துடன் குறித்த போட்டியில் மொத்தமாக 793 கிலோ கிராமை தூக்கி புதிய சாதனையையும் நிலை நாட்டியுள்ளார் . தொடர்ச்சியான உழைப்பாலும் சாதிக்க வேண்டும் என்ற இலட்சியத்தோடும் தொடர் சாதனைகளை படைத்து யாழ் மண்ணுக்கு பெருமை சேர்த்துக்கொண்டிருக்கும் சகோதரன் சற்குணராசா புசாந்தனுக்கு வாழ்த்துக்கள். அத்துடன் சற்குணராசா புசாந்தன் வருகின்ற டிசம்பர் மாதம் நியூசிலாந்தில் நடைபெறுகின்றன கொமன்வெல்த் நாடுகளுக்கிடையிலான பளுதூக்கல் சம்பியன்ஷிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் சர்வதேச மட்டங்களிலும் புதிய சாதனைகளை படைக்க வேண்டுமென வாழ்த்துகின்றோம்


.
பளுதூக்கல் போட்டியில் யாழ் வீரன் Kunam Pushaனின் தொடரும் தேசிய சாதனைகள் Reviewed by Author on October 31, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.