அண்மைய செய்திகள்

recent
-

பாணின் விலையில் நாளை மாற்றம்..?

பாண் விலை தொடர்பில் நாளை முதல் வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை 250 ரூபாவாக குறைக்கப்பட்டால் மாத்திரமே பாணின் விலை குறைக்கப்படும் என அந்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். 

 திறந்த கணக்கு முறையின் ஊடாக இலங்கைக்கு கோதுமை மாவை இறக்குமதி செய்ய அரசாங்கம் டிசம்பர் 31 ஆம் திகதி வரை அவகாசம் வழங்கியுள்ளது . வர்த்தக அமைச்சு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்துடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ரொட்டி உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை குறைப்பதும், அதிகரித்து வரும் கோதுமை மா விலையை கட்டுப்படுத்துவதும் இதன் நோக்கமாகும். வரும் பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி குறைந்த விலையில் வழங்குவதில் அரசு கவனம் செலுத்தி வருகின்றது.


பாணின் விலையில் நாளை மாற்றம்..? Reviewed by Author on October 30, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.