அண்மைய செய்திகள்

recent
-

ஹிக்கடுவையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் பலி

ஹிக்கடுவ, வாவல சந்திப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். துணி வியாபாரியான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்த அவரது மனைவி சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

 சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவருக்கும் சந்தேக நபருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நாரிகம பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஹிக்கடுவையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் பலி Reviewed by Author on November 30, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.