அண்மைய செய்திகள்

recent
-

யாழில் பொலிஸாரின் சமிக்ஞையை மீறியவருக்கு சிறைத்தண்டனை!

பொலிஸாரின் சமிக்ஞையை மீறி மோட்டார் சைக்கிள் ஓடிய இளைஞனுக்கு ஒரு மாத சிறைத்தண்டனை விதித்த பருத்தித்துறை நீதாவன் நீதிமன்றம் 45 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் விதித்துள்ளது. நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், போக்குவரத்து பொலிஸார் கடமையில் இருந்த போது, வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞனை மறித்த போது, பொலிஸாரின் சமிஞையை மீறி இளைஞன் அவ்விடத்திலிருந்து தப்பியோடி இருந்தார். 

 குறித்த இளைஞனின் மோட்டார் சைக்கிளின் இலக்கத்தின் அடிப்படையில், இளைஞனை அடையாளம் கண்டு பொலிஸார் கைது செய்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர். அதன் போது இளைஞன் தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து, ஒரு மாத சிறை தண்டனை விதித்த மன்று, 45 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்தது.


யாழில் பொலிஸாரின் சமிக்ஞையை மீறியவருக்கு சிறைத்தண்டனை! Reviewed by Author on November 24, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.