மண்டபம் வடக்கு கடல் பகுதியில் கடல் சீற்றம்:- மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தும் பணியில் தீவிரம்
மேலும் கடல் சீற்றம் காரணமாக மண்டபம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடைவதால் படகுகளை மீனவர்கள் பாதுகாப்பாக நிறுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதையடுத்து ராமேஸ்வரம் மற்றும் ராமேஸ்வரம் மண்டபம் பகுதி மீனவர்கள் இன்று (22) நான்காவது நாட்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக ராமேஸ்வரம், மண்டபம், தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்று வீசி வருவதால் சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் சாலையில் நடந்து செல்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மண்டபம் வடக்கு கடல் பகுதியில் கடல் சீற்றம்:- மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தும் பணியில் தீவிரம்
Reviewed by Author
on
December 23, 2022
Rating:

No comments:
Post a Comment