நைஜீரியாவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பதற்றம்; வங்கிகளுக்கு தீ வைப்பு
இதனால் பணப்புழக்கம் இல்லாமல் கடும் கொந்தளிப்பிற்கு ஆளான மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
பிரதான வீதிகளை மறித்தும், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டங்களில் வன்முறைகளும் இடம்பெற்று வருகின்றன.
ஆத்திரமடைந்த மக்கள் வங்கிகள் மற்றும் ATM இயந்திரங்களை அடித்து நொறுக்கி சூறையாடி வருகின்றனர்.
சில இடங்களில் போராட்டக்காரர்கள் வங்கிகளுக்கு தீவைத்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
நைஜீரியாவில் எதிர்வரும் 25 ஆம் திகதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான மக்களின் கிளர்ச்சியால் அங்கு பதற்றமான சூழல் நீடித்து வருகிறது.
நைஜீரியாவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பதற்றம்; வங்கிகளுக்கு தீ வைப்பு
Reviewed by Author
on
February 24, 2023
Rating:

No comments:
Post a Comment