கொழும்பு, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் நடவடிக்கைகளில் பாதிப்பு!
வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்புக் காரணமாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு பெண் வைத்தியர் உள்ளிட்ட மூன்று வைத்தியர்கள் கடந்த பத்து நாட்களாக தமது கடமையை புறக்கணித்ததன் காரணமாக இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
இதனால் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின 8ம் விடுதியில் உள்ள சிறார்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இத்துடன், குறித்த விடுதிக்கு குழந்தைகளை அனுமதித்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Reviewed by Author
on
July 07, 2023
Rating:
.jpg)

No comments:
Post a Comment