தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாறை மாவட்டத்தினது 34ஆவது இளைஞர் விளையாட்டுப் போட்டி அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில்.
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாறை மாவட்டத்தினது 34ஆவது மாவட்ட மட்ட இளைஞர் விளையாட்டுப் போட்டி அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர் முபாரக் அலி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை இம் மாதம் 05ம் திகதி காலை 08.00 மணி தொடக்கம் மாலை 06.00 மணிவரை சுவட்டு மைதான நிகழ்ச்சிகளாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிகழ்வானது அம்பாறை மாவட்டத்தில் காணப்படும் 20 பிரதேச செயலகங்களில் நடத்தப்பட்ட பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்ற விளையாட்டு வீர, வீராங்கனைகளின் பங்கேற்புடன் அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறும்.
மேலும் இப்போட்டியில் வெற்றி பெற்று, முதலாம் இடங்களைப் பெறும் இளைஞர் விளையாட்டு வீர, வீராங்கனைகள் 34வது தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளவுளமையும் குறிப்பிடத்தக்கது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாறை மாவட்டத்தினது 34ஆவது இளைஞர் விளையாட்டுப் போட்டி அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில்.
Reviewed by Author
on
November 03, 2023
Rating:
Reviewed by Author
on
November 03, 2023
Rating:


No comments:
Post a Comment