அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நலன்புரி சங்கம் UK இனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு.

 மன்னார் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த  கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன்னார் நலன்புரி சங்கம் UK இனால் நேற்றைய தினம் அத்தியாவசிய உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.


-மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பெரியமடு மற்றும் ஈச்சளவக்கை ஆகிய கிராம மக்களுக்கு உதவிகள் தேவை என விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக மன்னார் நலன்புரி சங்கம்   UK  துரித நடவடிக்கைகளை முன் னெடுத்தது.

அதற்கு அமைவாக மன்னார் நலன்புரி சங்கம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர்   அரவிந்தன் மற்றும்  அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு விவரங்களை சேகரித்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிகளை முன்னெடுத்தனர்.

இதன் போது குறித்த பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட நூறு குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 








மன்னார் நலன்புரி சங்கம் UK இனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு. Reviewed by NEWMANNAR on December 20, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.