அண்மைய செய்திகள்

recent
-

யாழ் கைதடியில் 2 ஆவது நாளாகத் தொடரும் போராட்டம்!

 வட மாகாண அரச சாரதிகள் சங்கத்தினர், யாழ் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண பிரதம செயலர் அலுவலகம் முன்பாக இன்று இரண்டாவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.



வடக்கு மாகாணத்தில் 5 வருடங்களாக தடைப்பட்டிருந்த சாரதிகளுக்கான இடமாற்றத்திற்கு பிரதிப் பிரதம செயலரால், கடந்த வருடம் விண்ணப்பம் கோரப்பட்டு இடமாற்ற பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது.


ஆளுநரின் கோரிக்கை அமைய பின்னர் அந்த இடமாற்றம் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இதனால் ஏமாற்றம் அடைந்த அரச சாரதிகள் கடந்த பெப்ரவரி மாதத்தில் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்தனர்.


அதனைத் தொடர்ந்து இடை நிறுத்தப்பட்ட இடமாற்றம், ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என பிரதி பிரதமர் செயலர் எழுத்து மூலம் உறுதிமொழி வழங்கி இருந்தார்.


இந்த நிலையில், குறித்த திகதி வரை இடமாற்றம் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், அரச சாரதிகள் சங்கம் நேற்று முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட அரச சாரதிகள் சங்கம், ஆளுநருக்கான மகஜரை அவரின் பிரதிநிதியிடம் கையளித்து, கைதடியில் அமைந்துள்ள பிரதமர் செயலர் அலுவலகம் முன்பாக தொடர்ச்சியாக போராடி வருகின்றனர்.


தங்களின் பிரச்சினைக்கான தீர்வு கிடைக்கும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என அரச சாரதிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.



யாழ் கைதடியில் 2 ஆவது நாளாகத் தொடரும் போராட்டம்! Reviewed by Author on June 04, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.