கனடாவில் இலங்கை தமிழ் இளைஞன் சுட்டுக்கொலை; துயரத்தில் பெற்றோர்
கனடா Scarborough Town Centre வணிக வளாகத்தில் நிகழ்ந்த இலங்கை தமிழ் இளைஞனின் மரணம் குறித்த குற்றச்சாட்டுகளை இரண்டு பதின்ம வயதினர்கள் எதிர்கொள்கின்றனர்.
கடந்த வாரம் வியாழக்கிழமை (21) பிற்பகல் Scarborough Town Centre வணிக வளாகத்தின் கழிப்பறையில் 19 வயதுடைய ஒருவர் துப்பாக்கியுடன் இறந்த நிலையில் காணப்பட்டதை அடுத்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
19 வயதான இலங்கை தமிழ் இளைஞன்
வணிக வளாகத்தின் கழிப்பறையில் 19 வயதான இலங்கை தமிழ் இளைஞன் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இதில் இரண்டு பதின்ம வயதினர்கள் கைது செய்யப்பட்டு இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.
இளைஞர் குற்றவியல் நீதிச் சட்டத்தின் விதிமுறைகளின் கீழ் பெயரிட முடியாத 17 வயது ஆண் சந்தேக நபர்கள் இருவர் மீதான குற்றச்சாட்டுகளை காவல்துறையினர் வெள்ளிக்கிழமை (29) அறிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் என்ன என்பது குறித்த விபரங்களை காவல்துறையினர் வெளியிடவில்லை. நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட இவர்கள் இவருக்கும் எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை.
அதேவேளை உயிரிழந்த இளைஞனின் பெற்றோர்கள் 1993ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது. இந்நிலையில் குறித்த இளைஞனின் மரணம் கனடா வாழ் தமிழ் மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
Reviewed by Vijithan
on
August 30, 2025
Rating:


No comments:
Post a Comment