மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளருக்கு பிணை
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குருநாகல் – பிலஸ்ஸ நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
மேலும், அவர் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 27 ஆம் திகதி அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டார்.
வாகனப் பதிவில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளருக்கு பிணை
Reviewed by Vijithan
on
April 21, 2026
Rating:
Reviewed by Vijithan
on
April 21, 2026
Rating:


No comments:
Post a Comment