அஜித் பெயரில் பரவும் போலித் தகவல்!
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் காலை 7.00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வரிசையில் நின்று மக்கள் ஆர்வமாக தங்கள் ஜனநாயக கடமையாற்றினர்.
திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் முதல் நபராக நடிகர் அஜித் சுமார் வாக்கு செலுத்தினார். அப்போது ‘No Need' என அஜித்குமார் கூறியதாக தகவல் பரவியது.
இந்நிலையில் இதுதொடர்பாக அஜித் குமார் மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்தார்.
நடிகர் அஜித் குமார் ஆட்சி மாற்றம் தேவையில்லை என்று கூறியதாக பரவி வரும் தகவல் தவறானது. அவர் அப்படி எந்த கருத்தையும் வெளியிடவில்லை என்று அவர் தெரிவித்தார்.
அஜித் பெயரில் பரவும் போலித் தகவல்!
Reviewed by Vijithan
on
April 23, 2026
Rating:
Reviewed by Vijithan
on
April 23, 2026
Rating:


No comments:
Post a Comment