வெற்றியை நெருங்கும் தமிழக வெற்றிக் கழகம்
தமிழக சட்டமன்றத் வாக்கெண்ணும் பணிகள் இன்று (4) மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.
தமிழகத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்களிப்பு கடந்த 23-ம் திகதி நடைபெற்ற நிலையில் இன்று காலை முதல் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மதியம் 12 மணிவரையான நிலவரப்படி அதிக தொகுதிகளில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முன்னிலைப் பெற்றுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தில் போட்டியிட்ட விஜய், செங்கோட்டையன், ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, பிரபு உள்ளிட்டவர்கள் தொடர்ந்தும் முன்னிலையில் உள்ளனர்.
அதேநேரம், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த 31 அமைச்சர்கள் ஆரம்ப கட்டத்தில் இருந்தே பின்னடைவை சந்தித்துள்ளனர்.
இந்த எதிர்பாராத திருப்பம் திமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி தனித்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் 110 இடங்களில் முன்னிலை வகிக்கின்றது.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கூட்டணி 67 இடங்களில் முன்னிலைப் பெற்றுள்ளது.
அதேநேரம் மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 57 இடங்களில் பெற்றுள்ளது.
இந்நிலையில் மேலூர் தொகுதியில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன் வெற்றி பெற்றுள்ளார்.
இது முதல் வெற்றி அறிவிப்பாக வௌியிடப்பட்டுள்ளது.
வெற்றியை நெருங்கும் தமிழக வெற்றிக் கழகம்
Reviewed by Vijithan
on
May 04, 2026
Rating:
Reviewed by Vijithan
on
May 04, 2026
Rating:


No comments:
Post a Comment