பேருந்தும், பாடசாலை வேனும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து
கண்டி - யாழ்ப்பாணம் A-9 வீதியின் கட்டுகஸ்தோட்டை, கலுகல பகுதியில் இன்று (15) பிற்பகல் 2.00 மணியளவில் பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் 17 பாடசாலை மாணவ, மாணவிகளும் வேனின் சாரதியும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனியார் பேருந்து கண்டி திசை நோக்கியும், பாடசாலை வேன் அதற்கு எதிர் திசையிலும் பயணித்துக்கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
காயமடைந்தவர்கள் கட்டுகஸ்தோட்டை பிரதேச வைத்தியசாலையிலும் கண்டி தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர்.
சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பேருந்தும், பாடசாலை வேனும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து
Reviewed by Vijithan
on
June 15, 2026
Rating:
Reviewed by Vijithan
on
June 15, 2026
Rating:


No comments:
Post a Comment