அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் ஆன்மீக அபிவிருத்தி வேலைத்திட்டம்


மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஏற்பாடு செய்திருந்த 'இளைஞர் மனதுக்கு அறநெறி' எனும் தொனிப்பொருளில் ஆன்மீக அபிவிருத்தி வேலைத்திட்டம் ஒன்று நேற்று புதன் கிழமை மன்னாரில் இடம் பெற்றது.

மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரியில் புதன் கிழமை காலை இடம் பெற்றது.

இதன் போது சர்வமதத்தலைவர்களும்,சர்வமதத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இதன் போது கலந்து கொண்ட சர்வமத தலைவர்கள் ஆன்மீகம் தொடர்பாகவும் மத நல்லிணக்க ஒற்றுமைகள் தொடர்பாகவும் இளைஞர் யுவதிகளுக்கு தெளிவு படுத்தினர்.

குறித்த நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாகாண பணிப்பாளர் என்.எம்.முனவ்பர்,நிஸ்கோ முகாமையாளர் ஐ.பி.ஜோன் பொஸ்கோ,இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள்,தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி பூலோகராஜா உற்பட பலர் கலந்து கொண்டனர்.








(மன்னார் நிருபர்)  
மன்னாரில் ஆன்மீக அபிவிருத்தி வேலைத்திட்டம் Reviewed by NEWMANNAR on December 27, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.