அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் தடை செய்யப்பட்டுள்ள இடங்களில் பண்டிகைக்கால வியாபாரங்களை மேற்கொள்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை.


எதிர் வரும் பண்டிகைக்காலத்தினை முன்னிட்டு இம்மாதம் 31 ஆம் திகதி வரை பண்டிகைக்கால வியாபாரங்களுக்காக மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்,மாவட்டத்தின் வேறு எந்தப்பகுதியிலும் வியாபாரங்கள் மேற்கொள்ள மன்னார் நகர சபை தடை விதித்துள்ளதாக மன்னார் நகர சபை தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் நிரந்தரமாக உள்ள வியாபார நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட பண்டிகைக்கால வியாபாரங்களை தவிர தற்காலிகமாக வீதிளில் போடப்பட்ட வியாபார நிலையங்கள் அனைத்தும் இம்முறை தடை செய்யப்பட்டுள்ளது.

-தடை செய்யப்பட்டுள்ள அனைத்து இடங்களிலும் 'இவ்விடத்தில் வியாபாரம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது;'' என மன்னார் நகர சபையினால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

-பண்டிகைக்கால வியாபார நிலையங்கள் அனைத்தும்   இம்முறை மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் மாத்திரமே அமைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 முறைகளை மீறும் அனைத்து வியாபாரிகளுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மன்னார் நகர சபை தலைவர் மேலும் தெரிவித்தார்.


மன்னாரில் தடை செய்யப்பட்டுள்ள இடங்களில் பண்டிகைக்கால வியாபாரங்களை மேற்கொள்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை. Reviewed by NEWMANNAR on December 16, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.